விண்வெளியிலிருந்து பார்ப்பதற்கு, பூமியானது, நீல நிறமும் பச்சை நிறமும் கலந்து ஒரு அழகான கிரகமாகத் தெரிந்தாலும், அதன் உட்பகுதி 5200°C வெப்பநிலையில் கொதித்துக் கொண்டிருக்கிறது. நாம் இந்த பூமியில் உயிர் வாழ்வதற்குக் காரணம், சரியான இடத்திலும், சரியான வெப்பநிலையிலும், பூமி அமைந்திருப்பதுதான். இந்த சூரியக்குடும்பத்தில், பூமியைப் போன்று உயிர் வாழத் தகுதியுள்ள கிரகம் எதுவும் இல்லை. ஆனால், இந்தப் பால்வெளி அண்டத்தில், கிட்டத்தட்ட 100 கோடி கிரகங்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற நிலையில் இருக்கலாம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அவை ஒவ்வொன்றும் பல ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன. நமது சூரியக் குடும்பத்தில் இருக்கும், உயிர்களின் உலகமாகிய பூமி எவ்வாறு உருவாகியது என்பதை இங்கு விரிவாகக் காண்போம்.
சூரியனின் உருவாக்கம்:
சுமார் 460 கோடி வருடங்களுக்கு முன்பு, பால்வெளி அண்டம் உருவாக்கிக் கொண்டிருந்த அதே சமயத்தில், இப்போது இருந்த சூரியக் குடும்பத்திற்குப் பதிலாக, வெறும் மேகங்கள் மட்டுமே இருந்தன. இந்த மேகங்களுக்கு அருகிலிருந்த ஒரு நட்சத்திரத்தின், வெடிப்பின் விளைவாக வெளியேற்றப்பட்ட அதிர்வலைகளால், இந்த மேகக் கூட்டத்தின் 98 சதவீத நிறையானது, ஓரிடத்தில் குவிக்கப்பட்டது. இதனால் உருவாக்கப்பட்டது தான் சூரியன்.
இந்த சூரியனின் உள்ளே நிகழ்ந்த அணுக்கரு இணைவினால், அது ஒளியையும், வெப்பத்தையும், உமிழ ஆரம்பித்தது. மேலும், அதன் நிறையின் காரணமாக, வெளி நேரப் போர்வையை வளைத்து, ஈர்ப்பு விசையையும் பெற்றது.
மீதமுள்ள இரண்டு சதவீத மேகக் கூட்டங்கள் சூரியனைச் சுற்றி, வலம் வரத் தொடங்கின. சூரியனின் ஈர்ப்பு விசையின் காரணமாக, அதன் அருகில் சென்று கொண்டிருந்த விண்கற்கள், ஈர்க்கப்பட்டன. அந்த விண்கற்களுக்கும் குறிப்பிட்ட ஈர்ப்பு விசை இருந்ததால், அவை ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதையில், சூரியனைச் சுற்றிவரத் தொடங்கின.
பூமியின் உருவாக்கம்:
அவ்வாறு விண்கற்கள் சூரியனைச் சுற்றிவரும் போது, அருகில் உள்ள, மற்ற விண்கற்களுடன் மோதி, அவை ஒன்றுடன் ஒன்று கலந்து, பல கிரகங்கள் உருவாக்கப்பட்டன. அப்படி உருவாக்கப்பட்டது தான் நமது பூமியும்.
பூமி, தனது ஆரம்ப காலத்தில் ஒரு நெருப்பு கோளமாகவே இருந்தது. இங்கு பூமியிலிருந்த கனமான உலோகங்கள் அதன் மையத்தை நோக்கிச் சென்றன. மற்ற உலோகங்கள் பூமியின் மேற்பரப்பிற்குத் தள்ளப்பட்டன. பூமிக்கு முன்பு இருந்த சூரியனின் வெப்பநிலை அதிகமாக இருந்தாலும், சுற்றி இருந்த விண்வெளியின் வெப்பநிலையானது -450°C எனும் அளவிலிருந்தது. இதனால் பூமியின் மேற்பரப்பு மட்டும் குளிர்ச்சி அடைந்து, அங்கிருந்த, நெருப்பு குழம்பானது பாறைகளாக மாற்றப்பட்டது. இவ்வாறு, பூமி குளிர்ச்சியடைந்து கொண்டிருக்கும் போது, "theia" எனும் கோளானது பூமியின் மீது மோதியது. மேலும் அது பூமியோடு ஒன்றிணையத் தொடங்கியது.
இந்த நிகழ்வில் வெளியேற்றப்பட்ட மாசுத்துகள்கள் பூமியைச் சுற்றி வலம் வரத் தொடங்கின. பிறகு இந்த துகள்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து, நிலவை உருவாக்கின. நிலவின் ஈர்ப்பு விசை, பூமியின் ஈர்ப்பு விசையை விடக் குறைவாக இருந்ததால், அது, பூமியைச் சுற்றி வலம் வரத் தொடங்கியது. இவ்வாறாக, பூமியைச் சுற்றி நிலவும், சூரியனைச் சுற்றி பூமியும் வலம் வரத் தொடங்கின. நிலவும் ஆரம்ப காலத்தில் நெருப்புக் கோளமாகவே இருந்தது. ஆனால், அதில் இரும்பு போன்ற கனமான உலோகங்களின் அளவு குறைவாக இருந்ததால், அது எளிதில் குளிர்ச்சடைந்தது.
பிறகு பூமியிலிருந்து, அதிக அளவில் "மீத்தேன்" வாயு வெளியேற்றப்பட்டது. இந்த வாயுவானது, பூமியின் மேலுள்ள மற்ற வாயுக்களுடன் வினைபுரிந்து, ஓசோன் படலத்தை உருவாக்கியது. இந்த ஓசோன் படலமானது, சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை, பூமிக்கு உள்ளே வரவிடாமல் தடுத்தது. இதே சமயத்தில் பூமியின் மையப்பகுதியிலிருந்த இரும்புக் குழம்பானது, பூமியைச் சுற்றி காந்தப் புலத்தை உருவாக்கியது. இந்த காந்தப்புலம் சூரியனிலிருந்து வரும் சில ஆபத்தான கதிர்வீச்சுகளைத் தடுத்தது.
பிறகு, சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல், பூமியில் பெய்த மழையால், பூமியிலிருந்து பள்ளங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு, கடல் உருவாக்கப்பட்டது. மேலும், இந்த மழையினால் பாறைகள் அரிக்கப்பட்டு மண் துகள்களும் உருவாக்கப்பட்டன. இவ்வாறாக, உயிர்கள் உருவாவதற்கு ஏற்ற அனைத்து சூழ்நிலைகளும் பூமியில் உருவாக்கப்பட்டது.
இதன் பிறகுதான், ஒருசொல் உயிரினங்கள், பலசெல் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், குரங்குகள், மனிதக் குரங்குகள், மனிதர்கள், அவர்களின் மண்ணாசை, மன்னராட்சி முறை, மக்களாட்சி முறை, மற்ற உயிர்களை அடிமைப்படுத்தும் மனப்பான்மை, பணத்திற்காக இயற்கை வளங்களை அதிக அளவில் சுரண்டும் எண்ணம், சுற்றுச்சூழல் மாசுபாடு, போன்ற அனைத்தும் உருவாகி, இப்போதைய நிலையில் நாம் உள்ளோம்.
இன்று பூமி உருவாகி சுமார் 450 கோடி வருடங்கள் ஆகின்றன. பூமி உருவானதிலிருந்து ஒவ்வொரு ஐந்து லட்சம் வருடங்களிலும், கிட்டத்தட்ட, பத்து கிலோமீட்டர் விட்டம் கொண்ட விண்கற்கள் பூமியின் மீது விழுந்துகொண்டுதான் இருக்கின்றன. இதைவிட மிகப்பெரிய விண்கற்களும் பூமியின் மீது விழுந்துள்ளன. அவற்றால் டைனோசர் போன்ற பல இனங்கள் அழிந்தும் உள்ளன. இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு, பூமி இன்றளவும் சூரியனைச் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது. இன்னும் 400 கோடி வருடங்களில், பூமி முழுவதுமாக அழிந்துவிடும். எனவே, பூமி என்னும் இந்த சொர்க்கத்தின் பசுமைத் தன்மையைப் பாதுகாத்து வாழ்வோம்.
********